ஈரோடு : அதிமுகவில் தானும் அடுத்த முதலமைச்சர் ஆகலாம் என்று பவானி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சுற்றுச் சூழல்துறை அமைச்சருமான கருப்பணன் மறைமுகமாக பேசி இருப்பது அக்கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் குருபப்பநாயக்கன் அதிமுகவின் தொழில்நுட்பட அலுவலகங்களை திறந்து வைத்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார் என்று கனவில் கூட கண்டு இருக்கமாட்டார் என்று குறிப்பிட்டார்.
எடப்பாடி தோகுதிக்கு எம்எல்ஏவான பழனிசாமிக்கு முதல்வர் வாய்ப்பு கிடைத்தது போல, பவானி தொகுதிக்கு கூட முதல்வர் வாய்ப்பு கிடைக்கலாம் என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார். பவானியின் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரபாக இருப்பவர் அமைச்சர் கருப்பணன் என்பதால் அவரது பேச்சு அதிமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரச்சாரத்தை பாதிப்பா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கருப்பணன், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.