முதுமலை: முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை பாதுகாக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மசினகுடி அருகே டயர் கொளுத்தி போட்டதால், காது கிழிந்து ரத்தப்போக்கு ஏற்பட்டு, காட்டு யானை உயிரிழந்தது. காட்டு யானை உயிரிழந்தது தொடர்பாக ஏற்கனவே 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 5 வனவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.