×

மக்கள் வரிப்பணத்தில் செயல்படும் இந்திய கடற்படை என்ன செய்து கொண்டிருக்கிறது?: மீனவர்கள் கொலை குறித்து வைகோ கேள்வி..!!

சென்னை: மக்கள் வரிப்பணத்தில் செயல்படும் இந்திய கடற்படை என்ன செய்துகொண்டிருக்கிறது என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை படை கொன்றது மன்னிக்க முடியாத குற்றம். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று அடித்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றுள்ளனர். இந்திய அரசு மீது இலங்கைக்கு எந்த அச்சமும் இல்லை. இதுவரை தமிழக மீனவர்கள் 800 பேரை இலங்கை படை கொன்று குவித்துள்ளது. வரும் 25ம் தேதி காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழக மீனவர்களை காப்பாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என வைகோ குற்றம்சாட்டினார்.


Tags : Indian Navy ,fishermen ,killing , People's Tax, Indian Navy, Vaiko
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...