டெல்லி: இந்தியாவில் திரிபுரா, மணிப்பூர், மேகாலயா தனி மாநிலங்களாக உதயமான தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சிக்கான மணிப்பூர் மாநிலத்தின் பங்கு பெருமைக்குரியது என கூறினார். திரிபுரா மாநிலம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறது எனவும், மேகாலயா மாநில இளைஞர்கள் சிறந்த படைப்பாற்றல் மிக்கவர்களாக உள்ளனர் என கூறினார்.