சென்னை: ஜனவரி 13,14 ஆகிய தேதிகளில் குமரிக்கடல், கேரள கடலோரப் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி கற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.