×

அனைவரும் நல் ஆரோக்கியத்துடன் இருந்து அனைத்து ஆசிர்வாதங்களையும் பெற்றுத் திகழுக : தமிழக ஆளுநர் பொங்கல் தின வாழ்த்து!!

சென்னை : அனைவரும் நல் ஆரோக்கியத்துடன் இருந்து அனைத்து ஆசிர்வாதங்களையும் பெற்றுத் திகழ தாம் வாழ்த்துவதாக தமிழக ஆளுநர் தமிழக மக்களுக்கு வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர், திரு.பன்வாரிலால் புரோகித் அவர்களின் பொங்கல் தின வாழ்த்துச் செய்தி : நிறைந்த, பெருமைக்குரிய பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகையினைக் கொண்டாடி வரும் இந்நன்னாளில், எனது உளம் நிறைந்த மகிழ்ச்சியையும் நல்வாழ்¢த்துக்களையும் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பொங்கல் அறுவடையின் திருநாள் இது நம் குடும்பங்களிடையே மகிழ்ச்சியையும் செழிப்பையும் திரளாகக் கொண்டு வருகின்றது. இந்த நாளில், இயற்கை அன்னையும், சூரியக் கடவுளும் மிகுதியான செழி¢ப்பை நம் வாழ்வில் கொண்டுவருவதை எண்ணி, நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

இந்த மங்களகரமான வேளையில், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நமது பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், கலைகள், பண்டிகைகள் ஆகிய யாவற்றையும் பாதுகாத்திட உறுதியான தீர்மானம் எடுத்திட முன்வருவோமாக! நாம் அனைவரும், நமது சிறந்த பாரம்பரியம் உயரிய பண்பாடு ஆகியவற்றை எண்ணி பெருமை கொள்ளவும், தமிழர் வழியில் நாம் வாழ்ந்து வரும் செழுமை நிலையை இனிவரும் நாட்களிலும், உயர்த்திப்பிடித்து சிறந்து வாழ்ந்திட முன்வருவோமாக!

பொங்கல் பண்டிகையானது ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மிகுந்த செழிப்பைக் கொண்டுவர விரும்புகின்றேன். அனைவரும் நல் ஆரோக்கியத்துடன் இருந்து அனைத்து ஆசிர்வாதங்களையும் பெற்றுத் திகழ வாழ்த்துகின்றேன், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Governor ,Tamil Nadu , Governor of Tamil Nadu, Pongal Day, Greetings
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்