×

208 நாட்களுக்கு பிறகு முதன்முறையாக புதிய கொரோனா பாதிப்பு 15,000த்திற்கும் கீழ் குறைந்தது : குணமடைந்தோர் விகிதமும் 97%ஐ நெருங்கியது!!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.51 லட்சத்தை தாண்டியது. இந்நிலையில், அதே போல், பாதிப்பு 1.04 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,584 பேருக்கு தொற்று உறுதி; இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,04,79,179 ஆக அதிகரித்துள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 167 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,51,327 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 18,385 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 1,01,11,294 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,16,558 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 96.49% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.44% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 2.07% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 8,97,056 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

* இதுவரை 18,26,52,887 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags : Corona, vulnerability 15,000, healed, rate
× RELATED இடஒதுக்கீடு தொடர்பாக கர்நாடக பாஜக...