×

நிச்சயமாக கேப்டன் கிளைமாக்ஸில் வருவார்... தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் : பிரேமலதா

பொங்கலூர்,திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருள்புரம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாற்று கட்சியினர் தேமுதிகவில் இணையும் விழா நடந்தது. இதில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது: நிச்சயமாக கேப்டன் கிளைமாக்ஸில் வருவார். தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார். அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என கூறி இருக்கும் சூழ்நிலையில் நாங்களும் காத்திருக்கிறோம்.தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பு தொண்டர்கள் நிர்வாகிகளின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு அறிவிக்கப்படும்.பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

மேலும்,செயற்குழு பொதுக்குழு கூட்டம் கூட்டி விரைவில் எங்களின் முடிவு அறிவிக்கப்படும்.தேமுதிகவை பொறுத்தவரை முரசு சின்னத்தில் தான் போட்டியிடுவோம். எங்களுக்கான தொகுதிகளை நிச்சயம் கேட்போம். தற்போது ஒருதலைபட்சமாக நான் கூற முடியாது. கூட்டணி தரப்பில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் முதல்வர் வேட்பாளரை தேமுதிக ஏற்கும்’ என்றும் அவர் கூறினார்.



Tags : Election Campaign, Premalatha
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...