×

அச்சுறுத்தும் புதியவகை கொரோனா...! இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 1.04 கோடியை தாண்டியது: 1.50 லட்சம் பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.04 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 18,222 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,04,31,639 ஆக உயர்ந்தது.

* புதிதாக 228 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,50,798 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 19,253 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 1,00,56,651 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,24,190 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 96.39% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.45% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 2.16% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 9,16,951 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

* இதுவரை 18,02,53,315 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags : victims ,India ,deaths , Threatening new type of corona ...! The number of victims in India has crossed 1.04 crore: 1.50 lakh deaths
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...