×

அன்புமணி வலியுறுத்தல் அஞ்சல் துறை தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: இந்தியா முழுவதும் அடுத்த மாதம் 14ம் தேதி நடைபெறவுள்ள அஞ்சல்துறை கணக்கர் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும்தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இத்தேர்வுகளில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவது நியாயமல்ல. இத்தகைய சூழலில் அஞ்சல்துறை தேர்வுகளில் மீண்டும் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது தவறு. பெரும்பான்மையான போட்டித் தேர்வுகள் தமிழில் நடத்தப்படும் நிலையில் அஞ்சல்துறை தேர்வுகளையும் தமிழில் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவரது டிவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Anbumani , Anbumani insists that postal department examinations should be conducted in Tamil
× RELATED காவிரி பாசன மாவட்டங்களில் மும்முனை...