×

வாட்ஸ்அப் மூலம் கஞ்சா விற்பனை: வாலிபர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே, செங்கல்பட்டு டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் இருந்த பையை சோதனை செய்ததில், கஞ்சா இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை, காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், பட்டுக்கோட்டையை சேர்ந்த அழகர் (24). ராட்டின கிணறு பகுதியில் உள்ள பிரியாணி கடையில் வேலை பார்க்கிறார் என தெரிந்தது. இதையடுத்து, அவர் தங்கிய அறையை சோதனையிட்ட போது, 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். தொடர்ந்து அவர், வாட்ஸ்அப் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 2கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.



Tags : Cannabis sale , Cannabis sale through WhatsApp: Youth arrested
× RELATED புதுச்சேரியில் பள்ளி மைதானத்தில் கஞ்சா விற்பனை.: வாலிபர் கைது