திருவண்ணாமலை: உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்து திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்துக்குள் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த பொதுமக்கள் தரையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் போராட்டத்தை அடுத்து திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.