×

கொட்டும் மழையில் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கொட்டும் மழையிலும் கையில் குடை பிடித்து சுற்றுலாப் பயணிகள் புராதன சின்னங்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மாமல்லபுரத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் கையில் குடை பிடித்தபடியும், ஒரு சில பயணிகள் மழையில் நனைந்தபடியும் வெண்ணெய் உருண்டைபாறை, அர்ச்சுணன் தபசு, கிருஷ்ணா மண்டபம், ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை ஆர்வமுடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதிலும், ஒரு சில பயணிகள் மழைக்கு வெண்ணெய் உருண்டை பாறை அடிப் பகுதியில் தஞ்சமடைந்தனர். மேலும், ஒரு சில பயணிகள் கடற்கரைக்கு செல்ல முயற்சித்தனர். ஆனால், கடற்கரைக்கு செல்லாதவாறு காவல்துறையினர் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதை கண்டு சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி சென்றனர்.

Tags : Mamallapuram , Tourists congregate in Mamallapuram in pouring rain
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...