மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.42 லட்சத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 3,282 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,42,136-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 49,666-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 18,36,999 பேர் குணமடைந்து வீடு திரும்பியநிலையில் தற்போது மருத்துவமனைகளில் 54,317 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.