×

இந்தியாவில் தடுப்பூசிகளுக்கு அனுமதி..! கொரோனா இல்லா தேசம்: ஆய்வாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஆய்வாளர்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒப்புதல் அளிக்கப்பட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை. மேலும், மருத்துவர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் ஒப்பந்தத்தை மஹாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த சீரம் நிறுவனம் பெற்றுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ‛பாரத் பயோடெக் நிறுவனமும், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பும் இணைந்து ‛கோவாக்சின் என்ற தடுப்பூசி தயாரித்துள்ளன. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த இரண்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி கோரி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இதனை ஆய்வு செய்த மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழுவினர், ‛ இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதிக்கலாம் என பரிந்துரை செய்திருந்தன.

நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று, ‛கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது என இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் சோமானி தெரிவித்துள்ளார். இதனை வரவேற்று பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு வலுப்படுத்தும் வகையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொரோனா இல்லாத மற்றும் ஆரோக்கியமான இந்தியா என்ற நோக்கத்தை விரைவுபடுத்தும் வகையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மமற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவிற்கு பாராட்டுகள். கடுமையாக உழைத்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : India ,Nation ,Corona ,Analysts , Vaccines allowed in India ..! Corona Free Nation: PM Modi Greetings to Analysts
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...