×

சேலம் அருகே பிடிஓ அலுவலகத்துக்கு துப்பாக்கியுடன் வீரப்பன் வேடத்தில் வந்த பாமகவினர்

சேலம்: தமிழகம் முழுவதும் கடந்த 30ம் தேதி, பாமக சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. சேலம் மாவட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்க பாமகவினர், கும்பலாக வந்தனர். அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலரை சந்திக்கச் சென்றனர். அந்த நேரத்தில் பாமகவை சேர்ந்த சிலர், வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் போல் முறுக்கு மீசையுடன் வேடமணிந்த 3 பேரை பிக்கப் வேனில் இருந்து அழைத்து வந்தனர். அவர்கள், கையில் துப்பாக்கிகள் வைத்திருந்தனர். ஒன்றிய அலுவலக வாசலில் நின்று கொண்டு, புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த 3 பேருடன் சேர்ந்து பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும் செல்போனில் செல்பியும் எடுத்தனர். இதனை பார்த்த அரசு அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  

சிறிது நேரத்தில் வீரப்பன் வேடமணிந்தவர் உள்பட அந்த 3 பேரும் வேனில் ஏறிச் சென்றனர். இதுபற்றி மேச்சேரி கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார், மேச்சேரி போலீசில் புகார் அளித்தார்.  போலீசார் விசாரணை நடத்தியதில், பா.ம.க.வை சேர்ந்த 3 பேரும் மரக்கட்டையில் செய்யப்பட்ட டம்மி துப்பாக்கிகள் கையில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் தேடி வருகின்றனர்.


Tags : Veerappan ,gunman ,office ,PDO ,Salem , Salem, to the BDO office, with a gun, Bamaka
× RELATED முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்...