சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை. வரும் 2021 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு, 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் 2ம் கட்டமாக நியமனம் செய்யப்படுகிறார்கள். அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் தொகுதிக்கு ஆனந்தராஜ், திருப்போரூர் தொகுதிக்கு ரகுராமன், மதுராந்தகம் (தனி) தொகுதிக்கு விஜயகுமார், பல்லாவரம் தொகுதிக்கு மகாதேவன், செங்கல்பட்டு தொகுதிக்கு ஜெயபால், செய்யூர் (தனி) தொகுதிக்கு சிவா ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் தொகுதிக்கு லட்சுமணன், பெரும்புதூர் (தனி) தொகுதிக்கு திருமால், உத்திரமேரூர் தொகுதிக்கு அருண்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்டம், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, வட்டம், ஊராட்சி, கிளை, சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.