டெல்லி: வேளாண் சட்டங்களை எக்காரணம் கொண்டும் திரும்ப பெற முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக 35 நாளாக போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 6-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. குறைந்தபட்ச ஆதார விலை பேச்சுவார்த்தைக்கு முன் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.