×

கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க 6 பைக்குகளை எரித்த கள்ளக்காதலி கைது

சென்னை: மதுரவாயல் சீமாத்தம்மன் நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 பைக்குகள் நேற்று முன்தினம் நள்ளிரவு தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 6 பைக்குகளும் எரிந்து நாசமானது. தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசார், அருகில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் பைக்குகளுக்கு தீ வைப்பது தெரியவந்தது. விசாரணையில், அந்த வீட்டில் வசிக்கும் பழனிபாபு குமாரின் கள்ளக்காதலி திவ்யா பைக்கிற்கு தீவைத்து தெரியந்தது.

பழனிபாபு குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி அமுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், அய்யப்பன்தாங்கலை சேர்ந்த திவ்யாவுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த பழனிபாபு குமாரின் மனைவி அமுதா, திவ்யாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், அமுதாவை பழிவாங்க நினைத்த திய்வா, அவரது பைக்கிற்கு தீ வைத்துள்ளார். இதில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 பைக்குகளும் எரிந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து திவ்யாவை கைது செய்தனர்.

Tags : Fake girlfriend arrested for burning 6 bikes to get revenge on fake boyfriend's wife
× RELATED வீட்டினுள் தொட்டி கட்டி தாயை புதைத்த மகன்: தூத்துக்குடியில் பரபரப்பு