×

பூனைக்கு வளைகாப்பு

பூந்தமல்லி: திருவேற்காட்டை சேர்ந்தவர் ஜோதிகுமார்(36). இவர் வளர்க்கும் பூனை ஒன்று குட்டி போடும் நிலையில் இருப்பதை உணர்ந்த அவரும் அவரது குடும்பத்தினரும் பூனைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த  முடிவு செய்தனர். அதன்படி பூனைக்கு புதிய ஆடை அணிவித்து அலங்காரம் செய்து சீர்வரிசை தட்டுகள் வைத்தும் ஏழு விதமான உணவுகள் மற்றும் பூனைக்கு பிரியமான நண்டு, மீன், இறால் உள்ளிட்ட அசைவ உணவுகள் வைத்து நாற்காலியில் அமரவைத்து பூனை கால்களில் வளையல் அணிவித்தனர்.


Tags : Baby shower for cats
× RELATED மாநகரப் பேருந்துகள் நிற்காமல்...