×

ஓபிஎஸ் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

பெரியகுளம்: டிஎன்டி பட்டியலில் 68 சமுதாய உட்பிரிவுகளை  சேர்க்க வேண்டும், இரட்டை சான்றிதழ் முறையை நிறுத்திவிட்டு ஒற்றை சான்றிதழ் முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரையில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதற்காக தென்கரை திருவள்ளுவர் சிலை அருகில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று பேரணியாக சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டத்தில் அடைத்தனர்.



Tags : OBS ,house , Those who tried to besiege the OBS house were arrested
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி