இஸ்லாமாபாத்: அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியாளர் டேனியல் பேர்ல். இவர் கடந்த 2002ம் ஆண்டு பாகிஸ்தானில் கடத்தி, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இங்கிலாந்தில் பிறந்தவரான அல்கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அகமத் ஒமர் சையத் ஷேக், மூன்று கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு 18 ஆண்டுகளாக சிறையில் இருந்த நிலையில், சிந்து மாகாண உயர் நீதிமன்றம், ஏப்ரலில் ஒமர் சையத்தின் மரண தண்டனையை ரத்து செய்தது. தண்டனை காலம் 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், ஒமர் சையத் உட்பட 4 பேரையும் விடுதலை செய்யும்படி சிந்து உயர் நீதிமன்றம் வியாழன்று உத்தரவிட்டது. அவர்களை விடுவித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்தது. இந்நிலையில், இவர்களை விடுவிக்க முடியாது என சிந்து மாகாண அரசு நேற்று அறிவித்தது.