ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள 10 மாவட்டங்களில் தாழ்வுநிலை பனிச்சரிவு ஏற்படும் அபாயத்துக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூஞ்ச், ராம்பன், கிஷ்ட்வர், அனந்த்நாக், குல்கம், பாரமுல்லா, குப்வாரா, பந்திபோரா, கந்தர்பால், கார்கில் உள்ளிட்ட மாவட்டங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிச்சரிவு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை ஜம்மு-காஷ்மீர் அரசின் பேரழிவு மேலாண்மைத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.