×

ராஜபாளையத்தில் அரசு பஸ் மோதி தந்தை, மகள், மகன் பலி

ராஜபாளையம்: ராஜபாளையம் புதிய பஸ்நிலையம் அருகே அரசு பஸ், டூவீலர் மீது மோதியதில் தந்தை, மகள், மகன் பலியாயினர்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே செந்தட்டியாபுரம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி மகன் கணபதி(36). பில்டிங் கான்ட்ராக்டர். மகன்  கமலேஷ்(9), மகள் குஷிகா(7). இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.இதனால் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக டூவீலரில் கணபதி நேற்று அழைத்து வந்தார். சிகிச்சை முடிந்து  செந்தட்டியபுரம் சென்று கொண்டிருந்தபோது புதிய பஸ் நிலையம் அருகே சேலம் செல்லும் அரசு பஸ், டூவீலர் மீது மோதியது.

இதில் சம்பவ  இடத்திலேயே கணபதி, அவரது மகள் குஷிகா உடல் நசுங்கி உயிரிழந்தனர். மகன் கமலேஷ் பலத்த காயங்களுடன் ராஜபாளையம் அரசு  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். முதலுதவிக்கு பின் அங்கிருந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவத்தையடுத்து அரசு பஸ் ஓட்டுநர், காவல் நிலையத்தில் சரணடைந்தார். விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tags : Rajapalayam , In Rajapalayam Government bus collides Father, daughter, son killed
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!