×

பிரபல ரவுடி பழனி கூட்டாளிகளுடன் கைது

பெங்களூரு: பெங்களூரு பனசங்கரி அம்பேத்கர் நகர் பிரபல ரவுடியான பழனி (41) தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை மிரட்டல், ஆள் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, பணம் பறிப்பு உள்பட பல்வேறு செயல்களில் ஈடுபடுவதாக குமாரசாமி லே அவுட் போலீசாருக்கு புகார் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்த போலீசார், கண்காணித்துவந்தனர்.  இந்நிலையில் நேற்று இது தொடர்பாக ரவுடி பழனி (41),  கூட்டாளிகளான புனித் குமார் (28), மோகனகுமார் (28), மகேஷ் (30), முனிராஜ் (30), நரசிம்மா (42), சிவராமு (27), தனுஷ் (22), ராகவேந்திரா (26), மூர்த்தி (44) ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் 2013ம் ஆண்டு தனது சகோதரரான ரங்கராஜ் என்பவரை அரசையா மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்தனர். இதையடுத்து 2018ம் ஆண்டு பழனி மற்றும் அவரது கூட்டாளிகள் அரசையாவை கொலை செய்துவிட்டு, சிறை சென்றுள்ளனர். சமீபத்தில் ஜாமீனில் வந்த அவர்கள், சிறை சென்று வந்ததை காரணம் காட்டி கட்ட பஞ்சாயத்து, நில பிரச்னை, சொத்து பிரச்னை தீர்த்து வைப்பது, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் ஆகிய செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது.

ஏற்கனவே பழனி பனசங்கரி காவல்நிலையம் ரவுடி சீட்டராக வலம் வந்த நிலையில் தற்போது, கொலை மிரட்டல், கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சோதனையில் இவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைதான 10 பேர் மீது குமாரசாமி லே அவுட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : Celebrity Rowdy Palani ,associates , Celebrity Rowdy Palani arrested along with associates
× RELATED 2 ஆண்டுகளுக்கு பிறகு வினீத் சீனிவாசனை பாராட்டிய பிருத்விராஜ்