சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். சித்ராவுக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்தான் திருமணம் நடந்துள்ளது. அவர், பதிவு திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பாக பெரும்புதூர் ஆர்டிஓ திவ்ய, விசாரணை நடத்தினார். இதைதொடர்ந்து, சித்ராவுடன் நடித்த சக நடிகை சரண்யா, தற்கொலை செய்து கொண்ட விடுதி ஊழியர்களிடமும் விசாரணை நடந்தது. பின்னர், சித்ராவின் உதவியாளர் ஆனந்திடம், நேற்று சுமார் 2 மணிநேரம் ஆர்டிஓ திவ்ய விசாரணை நடத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், சித்ரா தற்கொலை குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்றது. ஓரிரு நாளில் இதன் அறிக்கை, போலீசாரிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில் போலீசாரின் நடவடிக்கை இருக்கும் என்றார்.