×

தமிழகத்தில் புதிதாக 1,035 பேருக்கு கொரோனா: 12 பேர் மரணம்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 1,035 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  தமிழகத்தில் நேற்று மட்டும் 70,993 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,035 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தற்போது வரை 8,11,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 1,120 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதைச் சேர்த்து மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,89,862 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 12 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனையில் 6 பேரும், தனியார் மருத்துமனையில் 6 பேரும் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 12,036 ஆக உயர்ந்துள்ளது.

Tags : deaths ,Corona ,Tamil Nadu , Corona for 1,035 new people in Tamil Nadu: 12 dead
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...