×

புதுவகை கொரோனா வைரஸிடமிருந்து மனிதர்களை பாதுகாக்கும் வலிமை தங்களது தடுப்பூசி உண்டு!: மாடர்னா நிறுவனம் நம்பிக்கை..!!

வாஷிங்டன்: இங்கிலாந்தை ஆட்டி படைக்கும் புதுவகை கொரோனா வைரஸிடமிருந்து மனிதர்களை பாதுகாக்கும் வலிமை தங்களது தடுப்பூசிக்கு இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக மாடர்னா தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸானது இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வருகிறது. அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் அந்த வகை கொரோனா பரவுவதால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. சீனாவில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் கடந்த ஒரு வருடமாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 கோடியை நெருங்கிவிட்டது. இந்த நிலையில் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனம், தங்களது தடுப்பூசி புதிய வகை கொரோனா வைரஸிடமிருந்து மனிதர்களை பாதுக்காக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

கொரோனா உருமாற்றம் அடைந்தாலும் அதனை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மாடர்னா வழங்கும் என்று மருந்து தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக விலங்குகள், மனிதர்கள் மீது மாடர்னா தடுப்பு மருந்து செலுத்தி சோதிக்கப்பட்டிருப்பதாகவும் மருந்து தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தற்போது உருமாறிய கொரோனா வைரஸையும் மாடர்னா தடுக்கும் என்பதை உறுதிப்படுத்த, வரும் வாரங்களில் கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஃபைசரை தொடர்ந்து மாடர்னா கொரோனா தடுப்பு மருந்துக்கும் அமெரிக்காவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : company , New Corona, Man, Preservative, Modern Company
× RELATED மன்னிப்பு கோரி நாளிதழ்களில்...