×

அண்ணாத்த பட ஷூட்டிங்கில் 4 பேருக்கு கொரோனா உறுதி : ரஜினிகாந்துக்கு தொற்று இல்லை

சென்னை : அண்ணாத்த பட ஷூட்டிங்கில் 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அண்ணாத்த பட ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினி, நயன்தாரா,குஷ்பு, மீனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான், ஷூட்டிங்கில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஷூட்டிங்கில் பங்கேற்ற அனைவருக்கும் படக்குழு, பரிசோதனை நடத்தியதாக தெரிகிறது. அதன் முடிவில் நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா இல்லை என தெரிய வந்துள்ளது. இருப்பினும், ஹைதராபாத்தில் அவர் தன்னை தனிமை படுத்திக் கொண்டிருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை சன் பிச்சர்ஸ் தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.


Tags : Corona ,film shooting ,Rajinikanth , Annatha, film, shooting, corona, sure
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...