மும்பை: பாலிவுட் நடிகை ராகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும் நடிகர்கள், நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸின் புது வகை வேறு பரவி வருவதால் பலர் பீதி அடைந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கி, பல்வேறு முன்னணி நடிகர்களும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அனைத்துப் படப்பிடிப்புகளுமே கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன்தான் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
ஐதராபாத்தில் படப்படிப்பில் கலந்து கொண்ட தமன்னாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஐதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் குணமாகி வீடு திரும்பிய சரத்குமார் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.