சென்னை: நியாய விலைக்கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்குவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை விரைவாக வழங்க முடியவில்லை. ஏற்கனவே கடந்த அக்டோபரில் நியாய விலைக்கடைகளில் பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டபோது சிக்கல் ஏற்பட்டது.