×

தேர்தலில் போட்டியிடும் பார்வையற்ற இளைஞர்

தேர்தலில் போட்டியிட்டு மக்கள் சேவை செய்வதற்கு நல்ல ஆரோக்கியமான உடல் கட்டு இருந்தால் மட்டும் முடியும் என்பது இல்லை. மாற்று திறனாளிகளாலும் முடியும் என்ற மன தைரியத்துடன் கண்பார்வை இழந்த இளைஞர் ஒருவர் தேர்தல் களத்தில் உள்ளார். வடகனரா மாவட்டம், சிர்சி தாலுகா, கானகூடு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பீசலகொப்பா கிராமத்தில் இருந்து 3 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இத்தேர்தலில் ராகவேந்திரநாயக் என்ற கண்பார்வை இழந்த இளைஞர் போட்டியிட்டுள்ளார். கடந்த 2009ல் நடந்த தேர்தலில் இதே வார்டில் போட்டியிட்ட ராகவேந்திரநாயக், ஒரு வாக்கு வித்யாசத்தில் தோல்வியடைந்தார். மீண்டும் தேர்தல் களத்தில் உள்ள அவர், இம்முறை கிராம மக்களின் ஆதரவில் மீண்டும் தேர்தல் களத்தில் உள்ள நான் கண்டிப்பாக வெற்றி பெற்று மக்களின் தேவைகளுக்காக உழைப்பேன் என்றார்.

Tags : elections , Election, Youth
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...