காஞ்சிபுரம்: தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் அறவே ஒழிய வேண்டும் என காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேட்டியளித்தார். செழுமை கோடு தான் மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம் எனவும் கூறினார். பெண் சக்தி அதாவது குடும்ப தலைவிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என கூறினார். வறுமைக்கோடு என்ற வார்த்தைக்கு அளவுகோடு வைப்பதே எங்கள் நோக்கம் என கூறினார்.