மதுரை: மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசிடம் உடனடியாக ஒப்படைக்க நடவடிக்கை தேவை என்று தமிழக அரசுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களின் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்திலும் கூட நம்பிக்கைக் துரோகம் செய்ய துணிவது சரியா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.