டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. சர்க்கரை ஏற்றுமதிக்கு ரூ.3,500 கோடி மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சர்க்கரை மானியத்தின் மூலம் 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.