பெங்களூரு:முன்னாள் முதல்வர் குமாரசாமி நாளை (டிச.16) தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாடுவார்கள். இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என குமாரசாமி முடிவு செய்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில், கொரோனா தொற்று குறையாத நிலையில், மக்கள் படும் கஷ்டங்களுக்கு இடையே பிறந்த நாள் கொண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அன்றைய தினம் நான் பெங்களூருவில் இருக்க மாட்டேன். கட்சி உறுப்பினர்கள், நலம் விரும்பிகள் மற்றும் பொதுமக்களின் அன்பிற்கு நன்றி’’ என தெரிவித்துள்ளார்.