×

முதல் மனைவி தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா, பீட்டர் பால் நேரில் ஆஜராக உத்தரவு: சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி

சென்னை: பீட்டர்பாலின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 23ம் தேதி ஆஜராகும்படி நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பாலுக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை வனிதா விஜயகுமார், கடந்த ஜூன் மாதம், பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னுடனான திருமணம் ரத்து செய்யப்படாத நிலையில் வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டது குற்றம் எனக் கூறி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், புகார்தாரரான ஹெலனுக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்திருக்கிறது என்பதற்கும், அந்த திருமணம் ரத்தாகவில்லை என்பதற்கு ஆதாரங்களும், முகாந்திரமும் இருப்பதாக கூறி, வழக்கு தொடர்பாக டிசம்பர் 23ம் தேதி ஆஜராகும்படி, வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர்பாலுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Vanitha ,Peter Paul ,court action ,Saidapet , Actress Vanitha, Peter Paul ordered to appear in person in first wife case: Saidapet court action
× RELATED காதல் உறவுகளை சொல்லும் உப்பு புளி காரம்