×

அமைச்சர் செங்கோட்டையன் தகவல்: இம்மாதம் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை

சென்னை: செய்யூர் பகுதிகளில் வெள்ள சேதங்களை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். அப்போது, ‘இந்த மாதம் பள்ளிகளை திறக்க சாத்தியமில்லை’ என அவர் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில்  புயலால் பாதிக்கப்பட்ட ஈசூர், நீலமங்கலம், வெள்ளங்கொண்ட அகரம், வெண்ணாங்குபட்டு உள்ளிட்ட பகுதிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று முன்தினம்  பார்வையிட்டார். வெள்ளங்கொண்ட அகரம் கிராமத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘வருவாய் துறை, வேளாண் துறை கணக்கெடுப்பு முடிந்தவுடன் இன்னும் இரு நாட்களில் சேதங்கள் முழுமையாக அறிவிக்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் அடங்கிய நீலமங்கலம் என்ற இடத்தில் கிளியாறு குறுக்கே ₹ 9 கோடி செலவில், புதிய மேம்பாலம் கட்டுவதற்காக ஆயத்த பணி நடந்து உள்ளது. மிக விரைவில், இந்த மேம்பாலம் கட்டப்படும். தமிழகத்தில் இந்த மாதம் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. பள்ளி திறப்பதற்கான முடிவை முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்வோம்’ என்றார்.



Tags : Senkottayan ,Schools , Minister Senkottayan informed: Schools are not likely to open this month
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...