×

இத்தாலியின் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் பவுலோ ரோஸீ உடல் நலக்குறைவால் காலமானார்

இத்தாலி: இத்தாலியின் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் பவுலோ ரோஸீ உடல் நலக்குறைவால் காலமானார். பவுலோ ரோஸீ நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். 1982 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் நாயகன் என்று போற்றப்பட்டவர். அவர் செப்டம்பர் மாதம் 23-ம் தேதி இத்தாலியில் பிறந்துள்ளார். இவர் இத்தாலியில் கால்பந்து பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். அவர் உயிரிழந்த தகவலை அவரது மனைவி ஃபெடரிக்கா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பவுலோ உயிரிழந்ததற்கான காரணத்தை அவரது மனைவி தெரிவிக்கவில்லை.

கடந்த 1982 ஆம் ஆண்டு ஸ்பெய்ன் நாட்டில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், 6 கோல்களை அடித்து அந்த போட்டியின் நாயகனாக இத்தாலி மக்களால் போற்றப்பட்டார். மேலும் வைசென்சா, ஜுவெண்டஸ் மற்றும் மிலன் உள்ளிட்ட கிளப் அணிகளுக்காக விளையாடி அதிக கோல்களை அடித்துள்ளார். உலகின் தலைசிறந்த 125 கால்பந்து வீரர்களில் ஒருவர் என பிரேசில் கால்பந்து வீரர் பீலே இவரை கடந்த 2004 ஆம் ஆண்டு கவுரவப்படுத்தியுள்ளார். இந்நிலயைில் அவரது மறைவுக்கு கால்பந்து வீரர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கலை தெரிவித்துள்ளனர்.


Tags : Paulo Rossi ,Italian , Italy, footballer, Paulo Rossi, has passed away
× RELATED இத்தாலி ஓபன் 4வது சுற்றில் இகா