×

பூண்டி நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கிய இளைஞர்கள் உயிருடன் மீட்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தில் உபரி நீர் வெள்யேற்றப்பட்டு வருவதால் ஏராளமான பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் நேரில் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் குப்பம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (22), பிரபுகுமார் (22), மற்றும் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியை சேர்ந்த குணா (22) உள்பட 10 இளைஞர்கள் நேற்று மதியம் 2 மணி அளவில் பூண்டி நீர்தேக்கம் சென்று செல்போனில் செல்பி எடுத்து கொண்டிருந்தனர். அப்போது, பூண்டி நீர்த்தேக்கத்தின் உட்புறமாக பேபி கால்வாய் அருகே கரையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த சதுரங்கப்பேட்டையை சேர்ந்த மீனவர் சீனிவாசன் என்பவரது மீன்பிடிக்கும் படகை எடுத்துக் கொண்டு வெங்கடேசன், பிரபுகுமார், குணா ஆகிய 3 பேரும் பூண்டி நீர்த்தேக்கத்தின் உள்புறமாக சென்றுள்ளனர்.

படகு காற்றில் நீண்ட தூரம் நீர்த்தேக்கத்தின் மையப்பகுதிக்கு சென்றதால் உடன் வந்த சக நண்பர்கள் பயந்து போய் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் புல்லரம்பாக்கம் பகுதி இளைஞர்கள் சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 5 மணி நேரம் தேடிய பிறகு நீர்த்தேக்கத்தின் மையப் பகுதியில் படகு கவிழ்ந்த நிலையில் மார்பு அளவுக்கு நீரில் மூழ்கியபடி கவிழ்ந்த படகை கையில் பிடித்தவாறு தண்ணீரில் தொங்கிக்கொண்டிருந்த இளைஞர்கள் 3 பேரையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.


Tags : Youngsters ,Boondi Reservoir , Youngsters rescued after boat capsizes in Boondi Reservoir
× RELATED கண்டலேறு அணையிலிருந்து பூண்டி நீர்த்தேகத்திற்கு 500 கன அடி நீர் திறப்பு