×

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!!

புதுடெல்லி, டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது களமிறங்கியுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான விவசாயிகள் டெல்லியில் கொட்டும் பனியிலும் 12வது நாளாக போராட்டத்தை தொடருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளிலும் பேரணிகள் நடந்து வருகின்றன.

இந்த சூழலில் இங்கிலாந்தின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப், இந்தப் போராட்டம் குறித்து இந்தியாவிடம் கேள்வி எழுப்புமாறு, அவருக்கு 36 எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர். இங்கிலாந்து தொழிற்கட்சியின் தன்மஞ்சித் சிங் தேசி தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரிவு, இந்தியாவின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர்.

அதில், ‘இந்தியா அறிமுகப்படுத்தியுள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்கள் காரணமாக, விளைபொருட்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்யும் விவகாரத்தில், இந்திய அரசு தவறியதால் நாடு முழுவதும் பரவலாக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இது பிரிட்டனில் உள்ள சீக்கியர்களுக்கும் பஞ்சாபுடன் தொடர்புடையவர்களுக்கும் கவலை அளிக்கிறது. பல பிரிட்டிஷ்வாழ் சீக்கியர்களும் இந்த விஷயம் குறித்து கவலை கொண்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பஞ்சாபில் உள்ள அவர்களின் மூதாதையர் இச்சட்டங்களால் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள்’ என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : British Parliament ,Delhi , Delhi, Farmers, Struggle, British Parliament, Members
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...