×

நிரம்புகிறது பெரியகுளம் கண்மாய்: திருவில்லிபுத்தூர் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய கண்மாயான திருவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நிபர் புயல் மற்றும் புரெவி புயல் வடகிழக்கு பருவமழை ஆகியவற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் விருதுநகர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய கண்மாயான திருவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பலத்த மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் உள்ள கண்மாய்கள் மற்றும் குளங்கள் நிரம்பி வந்தன. அதனடிப்படையில் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. அந்த தண்ணீர் திருவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய்க்கு வந்து சேர்ந்தது. இதனால் தற்போது பெரியகுளம் கண்மாய் நிரம்பும் நிலையில் உள்ளது.

Tags : Periyakulam Kanmai ,Srivilliputhur , Periyakulam
× RELATED விருதுநகர் மாவட்டம்...