×

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு ஜாமீன் மறுப்பு

சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் சமீபத்தில் நீதிபதிகள் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் குறித்து யூடியூப்பில் கருத்து தெரிவித்திருந்தார்.  இதுகுறித்து பார் கவுன்சில் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்  அளிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், கர்ணன் தனக்கு ஜாமீன் கோரி சென்னை, ஜார்ஜ்டவுன் 3வது நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.  இந்த மனு நீதிபதி பஷீர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கர்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Karnan , Retired Judge Karnan denied bail
× RELATED கம்பர் – இராமாவதாரம்