×

ராஜாக்கமங்கலம் அருகே 3 பேர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சைக்கோ வாலிபர்'தானும் தீக்குளித்ததால் உயிர் ஊசல்

ஈத்தாமொழி:  ராஜாக் கமங்கலம் அருகே 3 வாலிபர்கள் மீது தீ வைத்த சைக்கோ வாலிபர், தானும் தீக்குளித்ததால்  உயிருக்கு போராடி வருகிறார். மேலும் ஒரு வாலிபரும் அபாய கட்டத்தில் உள்ளார். ராஜாக்கமங்கலம் கணபதிபுரதத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்.  இவரும் அதே ஊரை சேர்ந்த சதீஷ், காளி ஆகியோரும் சன்னதிதெருவில் உள்ள நூலகம்  முன்பு நேற்று முன்தினம் இரவு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது நூலகத்தின்  எதிரே உள்ள வீட்டை சேர்ந்த ராஜசேகரன்(40) என்பவர் வீட்டில் இருந்து  பெட்ரோல் பாட்டில்களுடன் ஆவேசமாக வந்து வெங்கடேசன், சதீஷ், காளி  ஆகியோர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். பொதுமக்கள் மற்றும் போலீசார் துரத்தியதால், தனது வீட்டில் இருந்து தப்பி ஓடிய ராஜசேகரன் தனக்குதானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

வெங்கடேசன், சதீஷ் நாகர்கோவிலில் உள்ள  ஒரு தனியார் மருத்துவமனையிலும், ராஜசேகரன் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். காளி லேசான காயத்துடன் தப்பிவிட்டார்.  ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். ராஜசேகரனுக்கு கஞ்சா புகைக்கும் பழக்கமும்  இருந்ததாக தெரிகிறது. இதனால், அவர் சைக்கோ போல் நடந்து கொள்வாராம்.  தற்போது அவர் தீ வைத்த வாலிபர்களுக்கும், அவருக்கும் எந்தவித முன்விரோதம் இல்லை கஞ்சா போதையே காரணம் என போலீசார் தரப்பில்  கூறப்படுகிறது.


Tags : Psycho Valipar ,Rajakamangalam , 3 people pouring petrol onto the fire near rajakkamankalam Psycho young man, 'that he survived the pendulum tikkulitta
× RELATED 8வது நாளாக கடலில் இறங்க தடை; கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் வெறிச்சோடியது