டெல்லி: இன்று இரவுக்குள் புரெவி புயல் இலங்கையின் திருகோணமலைக்கு வடக்கே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் தற்போது 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.