×

தீவிரவாதத்தை கட்டுப்படுத்த கூட்டு முயற்சி தேவை

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் கூட்டம் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் உறுப்பினராக இந்தியா இணைந்த 2017ம் ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாக இந்தியாவின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, ‘‘பிராந்தியப் பகுதிகளில் நிலவும் தீவிரவாதம் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. குறிப்பாக, எல்லை தாண்டிய தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. இதில் அனைத்து நாடுகளின் கூட்டு முயற்சி தேவை’’ என்று கூறியுள்ளார்.

Tags : Joint effort is needed to control terrorism
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...