டெல்லி: நிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், புயலால் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும். இவை அனைத்தும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.