×

குளச்சலில் சமூக விரோதிகளின் கூடாரமான தீயணைப்பு நிலையம் திறக்கப்படுமா?

குளச்சல்: குளச்சல் தீயணைப்பு நிலையம் நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலைய கட்டிடத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. மேலும் இங்கு தீயணைப்பு வாகனத்தை நிறுத்த போதிய இடவசதி இல்லை. இதனால் பஸ் நிலையத்தில் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்படுகிறது. தீ விபத்து குறித்த அழைப்புகள் வரும்போது, வாகனத்தை உடனடியாக எடுத்து செல்ல முடியாமல் பஸ்கள் இடையூறாக உள்ளன. இந்த நிலையில் குளச்சல் தீயணைப்பு நிலையத்துக்கு சொந்த கட்டிடம் கட்ட உப்பளம் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. மேலும் சுமார் ரூ.1 கோடி செலவில் கடந்த 15.03.2018ல் புதிய கட்டிடம் அமைக்கும் பணி தொடங்கியது. 2019ல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் 13 மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை.

இதுபோல கட்டிடத்துக்கு சுற்றுச்சுவரும் கட்டப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் இப்பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. மேலும் ‘குடி’மகன்கள் இங்கு வந்து மது அருந்தி செல்கின்றனர். இதனால் கட்டிட வளாகம் முழுவதும் மது பாட்டில்கள் உட்பட குப்பைகள் குவிந்து வருகின்றன. பலரும் சிறுநீர் மற்றும் மலம் கழிக்கவும் இங்கு ஒதுங்கி விடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே குளச்சல் தீயணைப்புத்துறை புதிய கட்டிடத்தை விரைந்து திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்களா?

Tags : tent fire station ,Kulachal , Fire Station
× RELATED குளச்சல் அருகே நிலபுரோக்கர் வீட்டில் திருடிய வாலிபர் கைது 3 பேருக்கு வலை