×

மிரட்டும் நிவர் புயல்; கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒருநாள் மட்டும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மாலை 5 மணிக்கு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. வங்கக் கடலில் உருவான, ‘நிவர்’ புயல் தற்போது அதிதீவிர புயலாக மாறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை மாமல்லபுரம்-காரைக்கால் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் புயல் பாதிப்பால் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகளில் நீர் தேங்கியதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் மழை பாதிப்பு காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு நாள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது, ‘நிவர்’ புயல் காரணமாக கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Never Storm ,Holidays ,stores ,districts ,Tasmac ,Cuddalore ,Villupuram ,Chengalpattu , Intimidating Never Storm; Holidays for Tasmac stores in Cuddalore, Chengalpattu and Villupuram districts
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...