டெல்லி: வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் வாரணாசி தொகுதியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை எதிர்த்து எல்லை பாதுகாப்பு படை காவலர் தேஜ் பகதூர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.